மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் சென்னை காமராஜர் சாலையில் விழாக்கள் இன்றி எம்.ஜி.ஆர். நினைவு வளைவை திறக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா நடத்தாமல் எம்.ஜி.ஆர். நினைவு வளைவின் மேல் உள்ள திரைகளை மட்டும் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி ஜனவரி 17-ம் தேதி அவரது நினைவு வளைவு திறக்கப்பட உள்ளது.

வழக்கு நடக்கும் போது நீதிபதிகள் கேட்ட கேள்விகள் விவரம் வருமாறு :

* நினைவு வளைவை தவிர எம்.ஜி.ஆரின் பெருமையை பறைசாற்ற தமிழக அரசு என்ன செய்தது..
* எம்.ஜி.ஆரின் கொள்கை, கருத்துக்களை பரப்ப தமிழக அரசு என்ன செய்தது..
*காது கேளாதோர், பார்வையற்றோருக்கு உதவ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கொள்கை அரசு பின்பற்றியதா…

திமுக எதிர்கட்சியாக இருக்கும் போதே திமுகவின்  மறைந்த தலைவர் கருணாதிக்கு மூன்று மாநில முதல்வர்களை அழைத்து வந்து விழா நடத்தி சிறப்பு செய்யும் போது .   நமது ஆட்சியில் நமது கட்சி நிறுவனரின் வளைவை கூட விழாவாக அதிலும் அவரின் பிறந்த நாளில் கூட சிறப்பு செய்ய முடியவில்லையே என   இதனை கேட்ட அதிமுகவினர் வேதனையில் உள்ளதாக உட்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.