தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் வடிவமைத்த உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள்களை 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்வெளிக்கு நாசா அனுப்பவுள்ளது.

தஞ்சாவூரை அடுத்த கரந்தை பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன், தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ‘I Doodle Learning’ நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து ‘cubes in space’ என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது.

மாணவர் ரியாஸ்தீன் 2019-2020க்கான ‘cubes in space’ போட்டியில் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார். 73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகளில் இரண்டு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளார் ரியாஸ்தீன்.

இந்த செயற்கைக்கோள்களுக்கு விஷன் சாட் V1 மற்றும் V2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு செயற்கைக்கோள்களும் 33 mm உயரம் மற்றும் 33 கிராம் எடையுடையது. இந்த இரு செயற்கைக்கோள்களும் உலகிலேயே மிகவும் எடை குறைவான பெம்டோ (Femto) செயற்கைக்கோள்கள் ஆகும்.

இந்த இரு செயற்கைக்கோள், பாலி எதரி இமைடு அல்டம் என சொல்லக்கூடிய தெர்மோ பிளாஸ்டிக்கை கொண்டு 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரு செயற்கைக்கோள்களும் வளிமண்டல மற்றும் விண்வெளி ஆய்வுகள் மற்றும் மைக்ரோ கிராவிட்டி பொருள் ஆராய்ச்சி (Atmospheric and space studies and microgravity material research) குறித்த ஆய்விற்கு உதவும். இதில் 11 சென்சார்கள் உள்ளன. அதன் மூலம் 17 பாராமீட்டர்களை கண்டறிய முடியும்.

இவர் கண்டுபிடித்த இந்த Femto செயற்கைக்கோள்கள் நாசாவில் இருந்து வரும் 2021 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.

மாணவர் ரியாஸ்தீன் கண்டுபிடித்துள்ள இந்த இரண்டு விஷன் சாட் V1 மற்றும் V2 செயற்கைக்கோள்களும் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாசாவில் சவுண்டிங் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கல்வி தொலைக்காட்சியில் காவி உடையில் திருவள்ளுவர்; சர்ச்சையில் கல்வித்துறை