பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10 % இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்
 
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கடந்த 8ந்தேதி மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
 
இந்நிலையில் பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 9ந்தேதி மாநிலங்களவையில் 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
 
நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறிய நிலையில், மத்திய மந்திரிசபை ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார்.
 
ஆனால் எற்கனவே 69 சதவிதம் இடஒதுக்கீடு உள்ள தமிழ்நாடு மற்றும் 68 சதவிதம் இடஒதுக்கீடு உள்ள மஹாராஸ்ட்ரா போன்ர மாநிலங்களுக்கு இதை நடைமுறை படுத்தவதில் உள்ள் சட்ட சிக்கல்கள் இனி மேல தான் தெரிய வரும் என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்