உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராசில் 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கரும்பு தோட்டத்தில் முதுகுதண்ட்டு உடைக்கப்பட்டு நாக்கு வெட்டப்பட்டு ரத்த வெள்ள்ளத்தில் மிதந்து  கிடந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆனால் அவர் போஸ்ட் மார்ட்டம் முன்னரே மனிஷாவின் பிணத்தை எரித்த பாஜக மாநிலம் உத்திர பிரதேசத்தின் காவல் துறை செய்கையை கண்டித்து ராகுல் பிரியங்கா கனிமொழி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் போராடி வந்த நிலையில் இது இந்தியாவின் மனசாட்சியை உலுக்குவதாக பலரும் கூறி வந்த நிலையில்   இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர் . 

இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்தீப் என்ற வாலிபர்,  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு (எஸ்பி) கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். 

இந்த கடிதத்தில், ‘நான் அப்பாவி, எனக்கு ஒன்றும் தெரியாது. அதேபோல், மற்ற மூன்று பேருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை. வழக்கு தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நானும், இளம்பெண்ணும் பல நாட்களாக நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் இருவரும் சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், எங்கள் நட்பு இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. செப்டம்பர் 14ம் தேதி நானும் இளம்பெண்ணும் வயலில் சந்தித்தோம். பின்னர், நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அதன் பிறகுதான் இளம்பெண்ணை அவரது அம்மாவும், சகோதரரும் அடித்துள்ளது எனக்கு தெரிய வந்தது. அவர்கள் இருவரும்தான் இளம்பெண்ணை கடுமையாக அடித்து, உதைத்து தாக்கியுள்ளனர்,’ என்று கூறியுள்ளார். 

இதை  கடந்த 7ம் தேதியிடப்பட்ட இந்த கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்ட தாகூர் உயர்சாதியை சேர்ந்த   நான்கு பேரும் தஙக்ள்  கைநாட்டை பதிவிட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் எஸ்பி.க்கு எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் கடும் கண்டங்களை பெற்ரு  வருகிறது. 

ஆனால் கையும்  களவுமாக ஆதராத்துடன் பிடிப்பட்ட நால்வர் கடிதம் அதுவும் சிறைகளில் இருக்கும் நால்வரின் கடிதம் பாஜக அரசின் அதரவு  மீடியாவுக்கு வந்தது எபபடி என கோபமுடன் பலரும் சமூகவளைதளத்தில் பலரும்  கேள்வி எழுப்ப அதனை தொடந்து ..

இது தொடர்பாக ஹத்ராஸ் எஸ்பி.யிடம் கேட்டபோது, ‘‘இந்த கடிதம் இதுவரை நேரடியாக எனக்கு கிடைக்கப்பெறவில்லை. சமூக வலைதளம் மூலமாக தான் இந்த கடிதம் கிடைத்தது. சிறையில் இருக்கும் அவர்களை பார்ப்பதற்காக சென்ற குடும்ப உறுப்பினர்கள் மூலமாக, இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு இருக்கலாம் அல்லது அலிகர் சிறை அதிகாரி மூலமாக பதிவிடப்பட்டு இருக்கலாம். எனக்கு உண்மை நகல் கிடைத்தால் மட்டும்தான் அது குறித்து பதிலளிக்க முடியும்,” என்றார்.

ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை நடக்கவே இல்லை என உபி அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம்