தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவருக்கும் போலிஸாரால் இழைக்கப்பட்ட அநீதிக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பொதுமக்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவல்துறையினரின் ஏமாற்று வேலைகள், கொலையை மறைக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து வெளிவரத் .தொடங்கியுள்ளன.

மேலும் சாத்தான்குளம் படுகொலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்புலமாகச் செயல்படக்கூடிய ‘சேவாபாரதி’ என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவ்வமைப்பினருக்கு தமிழக காவல்துறை ஊர்காவல் படையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஒருவரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும் வாசிக்க: சாத்தான்குளம் இரட்டைக் கொலை; ‘பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ விசாரிக்கப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்

இதுதொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலைவழக்கில் ஆதாரம், சாட்சியம் இருந்தும் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் தாமாக முன்வந்து தலையிட வேண்டியுள்ளது; மாஜிஸ்திரேட் விசாரணை செய்ய வேண்டியுள்ளது; ஒட்டுமொத்த தமிழகமே போராட வேண்டியுள்ளது என்பது கவலையளிக்கக்கூடிய விஷயம்.

அவர்களை தாக்கியதாக சொல்லப்படும் சேவாபாரதி இளைஞர்கள் (friends of police) ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட், சான்றளித்த மருத்துவர், சிறை அதிகாரி ஆகியோரையும் விசாரித்து வழக்கில் சேர்க்க வேண்டும். முன்னாள் எஸ்.பி, மாற்றப்பட்ட அதிகாரிகள் குமார், பிரதாபன் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=RyPF5ylEO4k” width=”700″ autoplay=”yes” title=”எப்படி ஆனார்கள் RSS அங்கமான சேவா பாரதி #friendsofpolice …”]