நடிகர் மாதவன் அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு “ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன் இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணியாற்றியவர். இவர் 1994-ல் அந்நிய நாட்டிற்கு நம் நாட்டு ராக்கெட் தொழில் நுட்ப ரகசியங்களை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிறகு நாராயணன் சிறையில் அடைக்கப்பட்டார். 1996-ல் இந்த வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டது.

கடைசியாக 2018-ல் அளித்த தீர்ப்பின்படி நம்பி நாராயணன் குற்றம் அற்றவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, அவரை விடுதலை செய்தது. மேலும் அவருக்கு ரூ. 50 லட்சம் நஷ்டஈடும் வழங்கப்பட்டது. நம்பி நாராயணன் தனக்கு நடந்த சம்பவங்களை ‘Ready To Fire: How India and I Survived the ISRO Spy Case என புத்தகமாகவும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையப்படுத்தி, தற்போது நடிகர் மாதவன் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படத்தை ஆனந்த் மகாதேவன் உடன் சேர்ந்து மாதவன் இயக்கி அதில் நடித்து வருகிறார். இப்படத்தில், நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்து வருகிறார். தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.