‘பியார் பிரேமா காதல்’ இசை வெளியீட்டு விழாவில் ‘தமிழ் படம் 2’ சிவா கூறுகையில், முன்னோரு சமயம் நடிகர் சிவா, இசைஞானி இளையராஜாவிடம் ஒரு பேட்டி எடுத்தாராம். அப்போது பேட்டியில் இளையராஜாவிடம் ‘ஆன்மிகம் பற்றி நீங்கள் அதிகம் பேசுகிறீர்கள், இந்த உலகம் எப்படி மாறினால் நல்லது?’’ என்று கேட்டாராம் சிவா.

அதற்கு இளையராஜா, சிவாவைப் பார்த்து, ‘‘உன் வேலை கேள்வி கேட்பது, என் வேலை பதில் சொல்வது. நாம் இருவரும் இந்த நேரத்தில் இந்த வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவனவன் வேலையை அவனவன் செய்தாலே இந்த உலகம் நன்றாக மாறும்’’ என்று கூறினாராம்.

இளையராஜா கூறியதைக் கேட்ட சிவா பேட்டி முடிந்ததும் அந்த இடத்திலிருந்து துண்ட காணும், துணியைக் காணும் என்று விட்டா போதுமடா சாமி என்று ஓடிவிட்டாராம்.