அயோத்தியில், கோயிலுக்கு வந்த பெண்ணை உள்ளேயே அடைத்து வைத்து, பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கோர சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட தலைமை அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி, கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி இங்குள்ள கோயில் ஒன்றுக்கு, வாரணாசியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் வழிபாட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது அங்குள்ள தலைமை அர்ச்சகர், அந்த பெண்ணிடம் ஆன்மிகம் தொடர்பாக பேசிக்கொண்டே கோயிலில் இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியும் திருப்தி அடையாமல்..

மேலும் ஒருவாரமாக அந்த பெண்ணை அங்கேயே வைத்து வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

கடும் சித்ரவதையை அனுபவித்து வந்த அந்த இளம்பெண், செவ்வாய்க்கிழமையன்று கோயிலில் இருந்து தப்பி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரிடம் வாக்குமூலம் பெற்ற போலிசார் பின்னர் , மருத்துவ பரிசோதனைகளை நடத்தி அவரின் கூற்றை ஊர்ஜிதம் படுத்திய பின்னர் போலீசார் தலைமை அர்ச்சகரை தற்போது கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .