பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் சினிமாவில் பிரபுதேவா இயக்கவுள்ள படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடன இயக்குனர், மற்றும் நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் பிரபுதேவா. அண்மையில், இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் “பொன் மாணிக்கவேல்” படத்தின் பட விளம்பரம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபுதேவா, நடிகர் விஜய் நடித்த போக்கிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தமிழில் இப்படம் வெற்றி பெற்றதையடுத்து, ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் போக்கிரி படத்தை இயக்கினார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சல்மான் கானும் பிரபு தேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையுவுள்ளனர். “தபாங்” படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை இன்று முதல் தொடங்கியுள்ளார் பிரபுதேவா.