தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். பிறகு காக்க காக்க, விண்ணைதாண்டி வருவாயா போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். அஜித்தை வைத்து என்னை அறிந்தால் போன்ற ஹிட் படங்களையும் இயக்கியுள்ளார்.

சமீபகாலமாக இவர் இயக்குவது மட்டுமில்லாமல் சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். முதலில் பாடல்களில் சில நிமிடங்கள் வந்தவர், பிறகு ஒரு சில சீன்களில் வந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான கோலி சோடா-2 படத்தில் போலீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது இன்னும் முன்னேறி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் கவுதமுக்கு ஜோடி எல்லாம் இல்லை பட்  காட்ஃபாதர் போல் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.