பிரபல நடிகர் ராம் சரண், இன்சூரன்ஸ் பணத்திற்காக படப்பிடிப்பை செட்டை கொளுத்தியதாக ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ராம் சரண் தேஜா, சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று படமான “சயீரா நரசிம்ம ரெட்டி” என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் செலவு ரூ.200 கோடி. இந்த படத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக சிரஞ்சீவின் பண்ணை வீட்டு வளாகத்தில் போடப்பட்டிருந்த பிரமாண்ட செட் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரூ.2 கோடிக்கும் மேலாக விலை மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் ராம் சரண் தான் பணம் இல்லாமல் இன்சூரன்ஸ் பணத்திற்காக செட்டை கொளுத்தினார் என ஊடங்களில் வதந்தி பரவியது. இந்த வதந்திகளை கேட்ட ராம் சரண் கடுப்பாகி, ரூ.200 கோடிக்கும் மேல் செலவு செய்து படத்தை தயாரிக்கிறேன், கேவலம் ரூ.2 கோடி இன்சூரன்ஸுக்காக செட்டை எரிப்பேனா என்று கொந்தளித்துள்ளதாக கூறப்படுகிறது.