இந்திய ரிசர்வ் வங்கியில் (Reserve Bank of India) காலியாக உள்ள 270 பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்: Security Guards – 270 (சென்னை – 19 இடங்கள்)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சில் பெற்றிருக்க வேண்டும். மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.11.2018 தேதிப்படி 25க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2018

விண்ணப்பிக்கும் முறை:  Reserve Bank of India என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…