இந்தியாவில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாகவும், அக்கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் பதிவிடும் வெறுப்புப் பேச்சுகளை பேஸ்புக் கண்டுகொள்ளாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பெண்கள், தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. மக்களிடையே சிறுபான்மை மக்களை புறக்கணிக்கும் வகையில், அவதூறுகளையும், வன்முறைக் கருத்துக்களையும் பேசி சர்ச்சையாக்குகின்றனர்.

வெகுமக்களிடம் பிரிவினைவாதத்தை உண்டாக்கும் வகையில், இஸ்லாமியர்கள் பற்றி முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வெறுக்கத்தக்க பேச்சை பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற பிரிவினை ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்துவரும் பாஜக கட்சி தலைவர்களின் முகநூல் பக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்து வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேஸ்புக் செயல்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகை  வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதிய “Facebook’s Hate-Speech Rules Collide With Indian Politics” என்ற கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உட்பட சில இந்து அமைப்புகள், கட்சிகள் செய்யும் பதிவுகளை நீக்குவது இல்லை.

இந்தியாவில் அரசை எதிர்த்தால் தங்களின் மார்க்கெட் மோசமாகிவிடும் என்று பேஸ்புக் மௌனம் காப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வால் ஸ்டிரீட் ஜர்னல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வன்முறையை தூண்டும் வகையில் பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை இந்திய பேஸ்புக் அதிகாரிகள் வேண்டும் என்றே நீக்குவது இல்லை, பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று கூறியுள்ளது.

பேஸ்புக் நிர்வாகத்தின் உயர்மட்ட கொள்கை நிர்வாகியான அங்கி தாஸ் என்பவர் டி.ராஜா சிங் உள்ளிட்ட 3 பாஜக கட்சி தலைவர்களின் மோசமான கருத்துக்களை நீக்காமல் விட்டுவதாக அந்த அறிக்கை பகிரங்க குற்றம் சாட்டி  குறிப்பிட்டுள்ளது.

வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரையில், பாஜகவின் தெலுங்கானா தலைவர் டி.ராஜா சிங், ரோஹிங்கியா முஸ்லிம்களாக குடியேறியவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும். முஸ்லிம்கள் துரோகிகள் என்று அழைக்கப்பட வேண்டும். அவர்களின் மசூதிகளை இடிக்கவேண்டும் என பேஸ்புக் பதிவுகள் மற்றும் பொதுமேடைகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுக்கத்த பேச்சுக்களை பேசி அச்சுறுத்தி வந்தார்.

கடந்த மார்ச் மாதத்தில், தெலுங்கான சைபர் கிரைம் உயர் காவல்துறை அதிகாரிகளே, ராஜா சிங் முகநூல் பதிவையும், கணக்கையும் முடக்கவேண்டும் என பேஸ்புக் நிறுவத்தினடம் பரிந்துரைந்தனர். ஆனால் ராஜா சிங்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது. இவரின் கணக்கை நீக்க கூடாது என்று அங்கி தாஸ் மறுத்துவிட்டார்.

அதேபோல், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டே தனது பேஸ்புக் பதிவில், ‘கொரோனா ஜிஹாத்’ என்ற சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். முஸ்லிம்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரப்புவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

அதனையடுத்து பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஸ்ரா, சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய வீடியோ ஒன்று வெளிவந்தது. மிஸ்ராவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சில மணி நேரங்களிலேயே, டெல்லியில் மதக் கலவரம் வெடித்தது, இதில் 53 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: அமித்ஷா மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதால், தோனி கட்டாய ஓய்வா.. வெளிவந்த பகீர் தகவல்கள்