இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 49 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 19,459 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 377 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்னிக்கை 16,475 பேர் ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 3,21,723 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் டெல்லி அதிக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது. டெல்லியில் 83,077 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு, 2,623 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 52,607 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 82,275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1079 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 45,537 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க: ஒரே நாளில் அந்தமான் நிகோபார், மணிப்பூரில் உணரப்பட்ட நிலநடுக்கம்