கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு மேலும் ரூ. 7,549 கோடி ரூபாய் நிதி ஒப்புதல் அளித்துள்ளது உலக வங்கி.

கொரோனா பாதிப்பு அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்புகளுக்காக உலக வங்கி இந்தியாவுக்கு கடந்த ஏப்ரல் 3 ந்தேதி 1 பில்லியன் டாலர் (7600 கோடி ரூபாய்) ஒதுக்கி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மேலும் 1 பில்லியன் டாலர் இந்தியாவுக்கான சமூக பாதுகாப்பு தொகுப்பை உலக வங்கி இன்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களுடன் தொடர்பு உடையதாக இந்த நிதியுதவி இருக்கும் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கியின் நாடுகளுக்கான இயக்குனர் ஜுனைத் கமல் அஹ்மத் கூறுகையில், ”இந்தியாவின் பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்திற்கு இந்த நிதி உதவிகரமாக இருக்கும். அரசின் பொது விநியோகம், டிஜிட்டல், வங்கி கட்டமைப்பு, ஆதார் போன்ற சமுதாய பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கான அனைத்து சமுக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், கட்டமைப்புகளை பலப்படுத்தவும் இந்த நிதி உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: சொந்த ஊர்களுக்கு திரும்ப போக்குவரத்து கேட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் கற்கள்வீசி திடீர் போராட்டம்

தற்போதைய நிதியுதவியின்படி, தற்போதைய நிதியுதவியின்படி, முதல் கட்டமாக 750 மில்லியன் டாலர் 2020 நிதியாண்டிலும், மீதமுள்ள 250 மில்லியன் டாலர் நிதி, இரண்டாம் கட்டமாக 2021 நிதியாண்டிலும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட நிதி பிரதம மந்திரி கரிப் யோஜனா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும். இரண்டாம் கட்ட நிதி மாநில அரசுகள் மூலம் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.