கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன்-2’ படத்திலிருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படம்இந்தியன் 2. படம் ஆரம்பித்த போதே ஷங்கர் தயாரித்த இம்சை அரசன் படப்பிரச்சனை, கமல் மேக்கப் சரிவராதது என படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.

மக்கள் நீதி மையம், பிக் பாஸ் என்று பிசியாக இருக்கும் கமல் ஹாசன், சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செலவழிக்கும் ஷங்கர். பட்ஜெட் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட போது ஷங்கரும், கமலும் சேர்ந்து தான் லைகா நிறுவனத்தை சமாதானம் செய்து படத்தை தயாரிக்க சம்மதிக்க வைத்துள்ளனர்.

இப்படத்தில் கமல், சித்தார்த், விவேக், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத் சிங் என மிகப் பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளம் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். அதில் “பிற படங்களில் ஏற்கனவே கமிட் ஆகியிருந்ததால் இந்தியன்-2 படக்குழுவினர் கேட்ட தேதிகளை தன்னால் கொடுக்க முடியவில்லை என்றும், எனவே வருத்தத்துடன் இப்படத்தில் இருந்து விலகுவதாகவும், இந்த படத்தை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும், குறிப்பாக ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை இழந்ததாகவும் இருப்பினும் இருவருடனும் எதிர்காலத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நம்ம வீட்டு பிள்ளை, துருவ நட்சத்திரம், வானம் கொட்டட்டும், கருப்பர் நகரம், மகளிர் அனி, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படம், விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு தெலுங்கு படம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.