மகாராஷ்டிராவை சேர்ந்த நர்ஸ் ஒருவர், மருத்துவர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் இணைந்து வாழ்ந்தபோது, இந்த பலாத்காரம் சம்பவம் நடந்ததாக மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் உடன்பட்டு உறவு வைத்துக்கொண்டால் அது பலாத்காரமாகவும், பாலியல் வன்கொடுமையாகவும் கருதப்படாது.
 
சில காலமாக இருவருக்கும் உறவு நீடித்து வந்தாலும், அது பலாத்காரம் இல்லை.
 
பாலியல் பலாத்காரத்துக்கும், சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கும் இடையே அதிக வேறுபாடு இருக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும்போது திருமணம் செய்து கொள்வதாக வாக்கு தருபவர், அதை செய்யத் தவறும்போது அதை பாலியல் பலாத்காரமாக எப்படி கருத முடியும் என கேள்வி எழுப்பி நர்ஸ் மனுவை தள்ளுபடி செய்தனர்.