அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப் போரில் அதிபர் ட்ரம்ப், அமெரிக்க நிறுவனத்திற்கு டிக்டாக்கினை விற்க வேண்டும், இல்லையென்றால் டிக்டாக்கிற்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு சீனத் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதனிடையே அமெரிக்காவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 45 நாட்களுக்குள் டிக்டாக் செயலி தடைசெய்யப்படும் ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்பின் முடிவை கடுமையாக எதிர்த்து டிக்டாக் நிறுவனம். இருப்பினும் ட்ரம்ப், டிக்டாக் செயலி மீதான தடையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்தார்.

தற்போது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்வதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிக்டாக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ட்ரம்ப் நிர்வாகம் உண்மைகளில் கவனம் செலுத்தவில்லை.

தனியார் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தலையிட முயன்றது. எங்கள் நிறுவனம் மற்றும் பயனர்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவதையும் உறுதி செய்வதற்காக, நீதித்துறையின் மூலம் தடை ஆணையை எதிர்ப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே டிக்டாக் தடை விதித்த ட்ரம்பின் முடிவிற்கு எதிராக வழக்குத் தொடர்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

சீனாவின் பைட்டேடான்ஸ் என்ற நிறுவனத்திற்கு டிக்டாக் செயலி சொந்தமானது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் டிக்டாக் செயலியை நிர்வகிப்பதற்கான உரிமையைப் பெறுவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ஸ்பானிஷ் ப்ளூ போன்று அல்லாமல் கொரோனா வைரஸ் 2 ஆண்டுக்குள் முடிவுக்கு வரும்- உலக சுகாதார அமைப்பு