‘மேயாத மான்’ படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தார். இவர் அடுத்ததாக ‘ஆடை’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.

உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிகை அமலாபால் நடிக்கவுள்ளார். தற்போது அமலா பால் கைவசம் மூன்று படங்கள் உள்ளன, இந்நிலையில் அவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது உள்ள சூழலில் நடிகைகள் பெரும்பாலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை அமலாபால் ‘அம்மா கணக்கு’, ‘அதோ அந்த பறவை போல’ படங்களை தொடர்ந்து ‘ஆடை’ படத்தின் கதையும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்டதாம்.

மேலும் இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.