குட்கா 40 கோடி ஊழல் சிபிஐ ரைய்டு புகழ் விஜயபாஸ்கரை அடுத்து அதிமுக வில் அமைச்சர் வேலுமணி ஊழல் குற்றசாட்டில் சிக்கி உள்ளது அரசியலில் பரபரப்பை கூட்டு உள்ளது

அதிமுக அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனங்களை பற்றி ஒரு தொகுப்பு :
1) கே.சி.பி. எஞ்சினியர்ஸ் லிமிடெட்
2) பி.செந்தில் அன்ட் கோ
3) வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் 4) கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா
5) ஆலயம் பவுண்டேஷன்ஸ் லிமிடெட்
6) கன்ஸ்ட்ரோமால் குட்ஸ் பிரைவேட் லிமிடெட்
7) இன்விக்டா மெடிட்டெக் லிமிடெட்
8)ஏஸ்டெக் மெஷினரி காம்பொனென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
;

இந்த நிறுவனங்கள் உள்ளாட்சி துறையில் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களையும் பெறுகின்றன. 86 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே வணிகம் செய்த ஒரு நிறுவனம், வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சரான பிறகு, 28 கோடி ரூபாய் அளவுக்கு “பிஸினஸ்” செய்யும் நிறுவனமாக மாறியிருக்கிறது.

சமீபத்தில் பிரபல டைம்ஸ் ஊடகம் 50நாள் விசாரணையில் அம்பலமான நகராட்சி ஒப்பந்தம் சம்பந்தமான ஊழல் என்ற தலைப்பில்
மூன்றே ஆண்டில் அமைச்சரின் பினாமி கம்பெனிகளின் முதலீடுக்கு கிடைத்த 104% லாபம் ., இன்னொரு நிறுவனம் ஐந்து மடங்கிற்கு மேல், தனது “பிஸினஸை” 150 கோடி ரூபாய் வரை அதிகரித்த விவரம் அனைத்தையும் குறிப்பாக 17 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஸினஸ் மட்டும் செய்து வந்த கேசிபி எஞ்சினியர்ஸ் லிமிடெட் என்ற கம்பெனி, எஸ்.பி. வேலுமணியின் நேரடிக் கண் பார்வை பட்டதன் விளைவாக இன்றைக்கு 500 கோடி பிஸினஸ் செய்யும் கம்பெனியாகி விட்டது எனபதை ஆதரத்துடன் வெளியிட்டது ..

ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு இயங்கி கொண்டு இருந்த போது பல் நூறு கோடி முறைகேடுகளை ஆதாரத்துடன் பட்டியலிட்டு பிரபல தமிழ் ஊடகம் விகடன் வெளிட்ட கார்ட்டுன் மிக வைரலாக 2015ல் அப்போது பேசப்பட்டது

இப்போது இதுவும் போதாது என அவரின் உறவினர் பினாமி மெட்டல் ஷீட் கம்பெனிக்கு, 149 கோடி ரூபாய் சென்னை ஸ்மார்ட் சிட்டி டெண்டர்; மேலும் பத்து மாநகராட்சிகளின் 100 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி டெண்ட அரசு ஒப்பந்தங்கள் விவகாரம் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்ப்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும், தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குனர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக்கொடுத்து உள்ளாட்சித்துறையை கொள்ளையாட்சி துறையாக உருக்குலைத்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.
உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அமைச்சரின் ஆணைப்படி தான் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.

இதனால் 942 கோடி உபரிநிதி வைத்திருந்த சென்னை மாநகராட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் இன்றைக்கு ரூ.2,500 கோடி கடனில் மூழ்கியிருக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவர் மீதும் தி.மு.க.வின் சார்பில் ஆதாரங்களுடன் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த ஊழல் புகார்களின் மீது லஞ்ச ஊழல் கண்காணிப்புத்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காமல், வெட்கமோ அச்சமோ இல்லாமல் ஊழலுக்கு துணைபோனது வேதனையளித்தது. அதனால் உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, இப்போது அந்த ஊழல் புகார்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக விசாரணைக்கு வந்துகொண்டிருக்கிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான இந்த ஊழல் புகார் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சட்ட நெறிமுறைகளை பின்பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அந்த பதவியில் நீடிப்பதற்கு தார்மீக ரீதியாக சிறிதும் தகுதியற்றவர் என்பதால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் நியாயமான நேர்மையான சட்டத்திற்குட்பட்ட வெளிப்படையான விசாரணைக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.