மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதியில் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன், “நான் இனி எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல”, என்று அறிவித்து, அப்பதவிக்குரிய கண்ணியத்தைக் காப்பாற்ற முன்வந்த குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள், சென்னை ராஜ்பவனில் தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்கள் எழுதிய ‘Those Eventful Days' என்ற புத்தகத்தை வெளியிட்டு விழாவில் அரசியல் பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதுதானா என்பது பற்றி குடியரசுத் துணைத் தலைவர் அவர்களே சுயபரிசோதனை செய்து கொள்வார் என்று தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Special Correspondent

ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க மறுத்து, 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து, ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கும் ‘குதிரை பேர’ அரசு உடனே சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளாலும் எடுத்து வைக்கப்பட்டு, முந்தைய பொறுப்பு ஆளுநர் அவர்களிடம் முறையிடப்பட்டு, அதற்குத் தீர்வு ஏதும் கிடைக்காத நிலையில்.. இன்றைக்கு அதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும்போது...

குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் “ஒரு அரசு மெஜாரிட்டியை நிரூபித்துவிட்டால் ஐந்து வருடங்கள் கழித்து மக்களிடம்தான் செல்ல வேண்டும்”, என்று தெரிவித்திருக்கும் கருத்து."

அரசியல் சட்டத்தின் மீதும், ஆளுநருக்கு உள்ள கடமைகள் மீதும், குடியரசுத் துணைத் தலைவர் பதவியின் கண்ணியத்தின் மீதும், நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

“அம்மாவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்”, என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் இதுபோன்ற கருத்தை வெளியிட்டு இருப்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள இயலாதது என்றும் ., ஆளுநர் மாளிகையை இனிவரும் காலங்களில் குடியரசுத் துணைத் தலைவர் அரசியல் பிரசாரங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

இந்த விழாவில் மேடையில் தலைமை செயலரை உக்கார வைத்து விட்டு துணை முதல்வர் ஓபிஸ்எஸ் க்கு நாற்காலி தராமல் கீழே அமரவைத்தது அதிமுக பன்னிர் அணியின் மனதை புண்படுத்தியதாக அவர்கள் வருத்தமுடன் தெரிவித்தனர்.