போர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டு பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ளது.

Special Correspondent

இந்த பட்டியல் தொடங்கப்பட்டதிலுருந்து, இந்த அளவு எண்ணிக்கை உயந்துள்ளது 31 வருடங்களில் இதுவே முதல்முறையாகும்.

போர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் தமிழர்கள் விவரம் பின்வருமாறு :

இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எச் சி எல் டெக்னாலஜிஸின் நிறுவனர் ஷிவ் நாடார் 102 ஆவது இடத்தை பிடித்துள்ளார். தற்போது எச் சி எல் நிறுவனம் 6.6 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது.

மலேசிய வாழ் தமிழரும், பெரும் செல்வந்தருமான ஆனந்த கிருஷ்ணன், ஃபோர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார். 2,043 பெரும் கோடீஸ்வர்களில் 219 வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்தின் மதிப்பு $6.5 பில்லியன்கள்.

இந்த பட்டியலில் அமெரிக்க பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 565 ஆக உள்ளது.

319 எண்ணிக்கையில் சீனா இரண்டாம் இடத்தையும், ஜெர்மனி 114 எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் எண்ணிக்கை 202லிருந்து 227 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பெண்களின் சொத்து மதிப்பு 852.8பில்லியன் டாலர்களாக உள்ளது.

இந்த வருடம், 195 பேர் புதியதாக இடம் பிடித்துள்ளனர் குறிப்பாக சீன பெருநிலப்பரப்பிலிருந்து அதிகம் பேர் இடம் பிடித்துள்ளனர்;

20 வயதாகும் அலெக்சாண்டரா ஆண்டர்சன் இந்த பட்டியலில் இடம் பிடித்த இளம் வயது நபர் ஆவார். சுய முயற்சியில், பணக்காரராக, "ஸ்டிரைப்" என்ற இணைய வழி பணம் செலுத்தும் வலைத்தளத்தை நிறுவிய 26 வயது ஜான் கோலிசன் இடம் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில், சுய முயற்சியில் பணக்காரர்களில் புதிதாக வந்த பெண் தாய்-லி ஆவார். குழந்தையாக இருக்கும் போது அமெரிக்காவில் குடிபெயர்ந்து தற்போது எஸ் எஸ் ஐ என்னும் நிறுவனத்தை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இரண்டாம் வருடமாக லாரியல் அழகு சாதன நிறுவனத்தின் வாரிசு 39.5பில்லியன டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார் . மேலும் கடந்த 23 வருடங்களில் 18ஆவது முறையாக பில்கேட்ஸ் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

போர்ப்ஸ் வெளியிட்டில் படி 6 மாதங்களுக்கு முன் வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ( 86 பில்லியன் டாலர் மதிப்பும்) அமேசான் நிறுவனர் ஜெப் (73 பில்லியன் டாலர் மதிப்பு) ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் ‛பிளாக் பிரைடே' விற்பனைக்கு பிறகு அமேசான் நிறுவனர் ஜெப்பின் பணமதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதையடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளார். அதுவும் ஒரு நாளில் நடந்த வியாபாராத்தின் மூலம் அவர் இந்த நிலையை எட்டியுள்ளது. குறிப்பிடத்தக்கது.