தலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக, போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

Special Correspondent

சென்னையில் இயக்குனர், சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார், கடந்த நவ., 21ம்தேதி வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். சினிமா தயாரிப்பாளரான அவர், 'தன் தற்கொலைக்கு கந்துவட்டி பைனான்சியர் அன்புச்செழியனே காரணம்' என, கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இந்நிலையில் அன்புச்செழியன் அவர், குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து அன்புச்செழியன் மீது, வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து வளசரவாக்கம் போலீசார் அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் அன்புசெழியன் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், அனைத்து விமான நிலையங்களுக்கும் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன் நடிகர் அஜித் மற்றும் லிங்குசாமி ஆகியோரும் அன்பு செழியனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதும் மேலும் நடிகர் பார்த்திபன் அன்பு செழியனால் தனது முதல் முதலில் பங்களா விற்றதை தெரிவித்துள்ளதும் பரபரப்பு ஆகியுள்ளது. அன்பு செழியன் பற்றி மேலும் செய்திகள் அறிய