பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டார். புதிய பாடத்திட்ட வரைவு பள்ளிக்கல்வித்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. www.tnscert.org என்ற இணையதளத்தில் புதிய பாடத்திட்ட வரைவை டவுன்லோட் செய்து பார்க்கலாம்.

Special Correspondent

இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தற்போது புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இணையதளத்தில் வரைவு பாடத்திட்டங்கள் பற்றி 15 நாளில் பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இந்த ஆண்டு 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பாடதிட்டம் மாற்றம் செய்யப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அடுத்தாண்டு 2,7,10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.

மேலும் 2020-2021ம் ஆண்டு 3,4,5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.