தூத்துக்குடியில், 99 நாட்கள் நடைபெற்ற மக்களின் போராட்டத்தை வேடிக்கை பார்த்த அதிமுக அரசு 100 வது நாளில் 13 உயிர்களை சுட்டுக்கொல்லும் முன்பே, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை வெளியிட்டிருந்தால், அதிமுக அரசுக்கு ஆலையை மூட வேண்டும் என்ற நல்லெண்ணம் இருக்கிறது என்று நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிமன்றங்களை நாடி நிவாரணம் தேட முயற்சிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.

Special Correspondent

தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணை எந்த அளவுக்கு நீதிமன்றத்தில் நிற்கும்... என்ற கேள்விக்கு பதில் இதோ :

"தற்போது இந்த அரசாணையை 1974ஆம் ஆண்டின் நீர் பாதுகாப்புச் சட்டத்தின் படி மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. இது போதுமானதாகத் தோன்றவில்லை. காற்றுப் பாதுகாப்புச் சட்டத்தையும் அரசு குறிப்பிட்டிருக்கலாம். தவிர, இந்த ஆலை எவ்விதமாகவெல்லாம் சூழலை மாசுபடுத்தியது, விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்தும் அந்த அரசாணையில் ஏதும் இல்லை" என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

வெறும் பொதுநலன் என்ற வார்த்தை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்திருக்கும் விதிமுறைகளை பின்பற்றுவதாகக் கூறி அந்த நிறுவனம் நீதிமன்றங்களை நாட முடியும் என்று சுட்டிக்காட்டுகிறார்.

Special Correspondent

மேலும் இந்த முறை போராட்டம் பெரிதாக மக்களின் உணர்வுகளும் ஆலைக்கு எதிராக உருவாகியிருப்பதால் அரசு உறுதியாக இருக்குமென நம்பலாம்"தமிழ்நாட்டில் தாமிர உருக்காலை இது ஒன்றுதான். ஆகவே, தமிழகத்தில் தாமிர உருக்காலைகள் அமையக்கூடாது என்பதை ஒரு கொள்கை முடிவாகவே, சட்டமாகவே அறிவிக்கலாம். ஒரு மாநிலத்தில் எவ்விதமான தொழிற்சாலைகள் இருக்கலாம் என்பதை அந்த மாநில அரசுகள் முடிவுசெய்ய முடியும். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசு இதற்காக ஒரு சட்டத்தை இயற்றியிருக்க வேண்டும்" என்கிறார் வெற்றிச்செல்வன்.

Special Correspondent

"இந்த அரசாணையை நான் முழுவதுமாக வரவேற்கிறேன். ஆனால், நிரந்திரமாக ஸ்டெர்லைட் உருக்காலையை மூட வேண்டுமென்றால், அமைச்சரவை கூடி கொள்கை முடிவெடுக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவாக மாற வேண்டும்." என்கிறார்மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமனும் தமிழக அரசின் இந்த அரசாணை நீதிமன்றத்தை தாண்ட வேண்டும் என்கிறார். "இந்த ஸ்டெர்லைட் ஆலையின் வரலாற்றைப் பார்த்தால் அந்த ஆலை இதற்கு முன்பாக பல முறை மூடப்பட்டு, நீதிமன்ற ஆணைகளைப் பெற்றுத் திறக்கப்பட்டுள்ளது தெரியவரும்" என்கிறார் அவர்.

இதற்கு முன்பாக 1998ல் அரசால் இந்த ஆலை மூடப்பட்டதைச் சுட்டிக்காட்டும் ஹரி பரந்தாமன், அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆகியவை ஒரே குரலில் பேசியதை நினைவுகூர்கிறார்.

"அப்போது ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசு, நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது ஸ்டெர்லைட் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகவும் இனியும் கடைப்பிடிக்கும் என்று கூறியது. ஸ்டெர்லைட்டும் அதையே கூறியது. ஆகவே ஒரே மாதத்தில் ஆலையைத் திறக்க உத்தரவிடப்பட்டது" என்கிறார் ஹரி பரந்தாமன்.

அதேபோல 28.9.2010-ல் ஸ்டெர்லைட்டை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் மூன்றே நாட்களில் மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக இருந்ததால் ஆலை மூன்றே நாட்களில் திறக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டுகிறார் ஹரி பரந்தாமன்.

2013-லும் இதேபோல ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால், அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்று ஆணை பெற்று ஆலையைத் திறந்ததை சுட்டிக்காட்டும் ஹரி பரந்தாமன், இப்போதும் அந்தஆலை நீதிமன்றத்திற்குச் செல்லும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், அப்படி நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்றால் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்; இந்த முறை போராட்டம் பெரிதாக மக்களின் உணர்வுகளும் ஆலைக்கு எதிராக உருவாகியிருப்பதால் அரசு உறுதியாக இருக்குமென நம்பலாம் என்கிறார் ஹரி பரந்தாமன்.

அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி இந்த அரசாணையை வெளியிடவில்லை. உரிய சட்டமுறைகளின்படியும் மூடியதாகத் தெரியவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிறது என்பதற்காக அள்ளித்தெளித்த கோலத்தில் ஒரு ஆணையை வெளியிட்டிருக்கிறார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில், 2013ல் இதேபோன்று ஆலையை மூடி கண்துடைப்பு நாடகத்தை நடத்தினார். பிறகு, அதே ஆலையை ஆய்வுசெய்த மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலாளர், "ஆலை பாதுகாப்பாக இருக்கிறது", என்று அறிக்கை கொடுத்தார்.

அதனால் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. “நாங்கள் மூடுவது போல் மூடுகிறோம். நீங்கள் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்று ஆலையை திறந்து கொள்ளுங்கள்”, என்ற கண்துடைப்பு நாடகத்தை அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையாரும் நடத்தினார். இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் அதே நாடகத்தை நடத்தியிருக்கிறார் என் சொல்லி இருக்கிறார் தமிழ் நாட்டின் எதிர் கட்சி தலைவர் மு.க ஸ்டாலின்.

ஆலையின் பா"அரசு மிகவும் மொன்னையான காரணங்களை கூறி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடி உள்ளது. இந்த காரணங்கள் எதுவும் நீதிமன்றத்தில் செல்லாது" என்கிறார் சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன்.

"மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி ஸ்டெர்லைட் உரிமத்தை புதுபிக்க மறுத்தது. மே 23 அம் தேதி ஆலையை மூடுவதற்கான உத்தரவும் அதனை தொடர்ந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றாலும், சட்டரீதியாகவும், தொழிற்நுட்ப ரீதியாகவும் கூர்மை இல்லாத காரணங்கள் சொல்லி இந்த ஆலையை மூடி இருக்கிறார்கள்.2013 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இப்படியான மொன்னை காரணங்கள் சொல்லிதான் ஆலையை மூடினார்கள். ஆனால் என்ன நடந்தது? மீண்டும் ஆலை இயக்கப்பட்டதுதானே? " என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த வேதாந்தா நிறுவனம், ''தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நன்கு படித்தபிறகு, எங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்'' என்று தெரிவித்துள்ளது.