உ.பி.யில் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை ஆயுத வழக்கில் சிக்க வைக்க பா.ஜனதா எம்.எல்.ஏ. சதிதிட்டம் தீட்டியது தெரியவந்து உள்ளது.

Special Correspondent

உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரை போலீஸ் கைது செய்யாமல் இருந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி போராடிய அவருடைய தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

போலீஸ் காவலில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரிதும் அதிர்ச்சி ஏற்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரிகளையும் இணைத்தது. சமீபத்தில் உத்தரபிரதேச மாநில போலீசை சேர்ந்த இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களை கைது செய்தது.

இதுதொடர்பாக விசாரணை நீடித்துவந்த நிலையில் போலீஸ் உதவியுடன் சிறுமியின் தந்தையை ஆயுத வழக்கில் சிக்க வைக்க பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சதிதிட்டம் தீட்டியது தெரியவந்து உள்ளது, இவ்விவகாரம் தொடர்பாகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.

மேலும் இது சம்பந்தமாக : உ.பி-யில் பாஜக எம்.எல்.ஏவின் வெறிசெயல்