நீட் அவலம்; தேர்வறையில் கண்காணிப்பாளர் மோசமாக பார்த்தார் - மாணவி வேதனை

Special Correspondent

தேர்வறையில் கண்காணிப்பாளர் மோசமாக பார்த்தார், என பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

நீட் தேர்வின் போது மாணவர்களிடம் சோதனை என்ற பெயரில் அவர்கள் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Special Correspondent

மாணவர்களிடம் நடந்துக்கொண்ட முறை தொடர்பாக சிபிஎஸ்இ, தமிழக அரசுக்கு ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்நிலையில் கேரளாவில் மாணவி நடத்தப்பட்ட விதம் தொடர்பான செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலக்காடு மாவட்டம் கோப்பாவில் உள்ள பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி, தேர்வின் போது உள்ளாடையை கழற்ற வற்புறுத்தப்பட்டதாக போலீசில் புகார் கொடுத்து உள்ளார். போலீஸ் மாணவியின் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ளது.

சோதனையின்போது மேல் உள்ளாடைகளை கழற்றுமாறு சோதனையாளர்கள் கூறினார்கள். எனது ஆடையில் மெட்டல் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தார்கள். எனக்கு உள்ளாடையை கழற்ற ஒருமாதிரியாக இருந்தது. பின்னர் கழற்றினேன்.

உள்ளாடையை கழட்ட நேர்ந்த போது மிகவும் அவமானமாக உணர்ந்ததாகவும், தன்னுடன் சேர்த்து மேலும் 25 மாணவிகளின் மேல் உள்ளாடைகளை சோதனையின் போது கழற்ற வைத்தார்கள் என்றும் மாணவி புகாரில் கூறினார். மேலும் தேர்வு அறையில் கண்காணிப்பாளர் தன்னை மிகவும் மோசமான முறையில் பார்த்தார் கேள்வித்தாளால் மறைத்து எழுதினேன் எனவும் மாணவி தெரிவித்து உள்ளார்.

உள்ளாடையை கழற்றசெய்த பின்னர் தேர்வறைக்கு தேர்வு எழுத சென்றேன், அங்கு ஆண் கண்காணிப்பாளர் என்னை மிகவும் மோசமான முறையில் பார்த்துக்கொண்டு இருந்தார், என்னால் தேர்வின் மீது கவனம் செலுத்த முடியவில்லை எனவும் மாணவி குறிப்பிட்டு உள்ளார்.

மாணவியின் சகோதரி மீடியாக்களிடம் பேசுகையில், “கண்காணிப்பாளர் பல்வேறு முறை என்னுடைய சகோதரியின் முன்னால் வந்து நின்று உள்ளார். அவர் என்னுடைய சகோதரியின்முகத்தை பார்க்கவில்லை, மாறாக அவருடைய மார்பையே பார்த்து உள்ளார். என்னுடைய சகோதரி கேள்வித்தாளை கொண்டு மறைத்து தேர்வை எழுதி உள்ளார். என்னுடைய சகோதரி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார். கண்காணிப்பாளர் அடிக்கடி பக்கத்தில் வந்து நின்றதால் அவளால் முறையாக தேர்வை எழுத முடியவில்லை,” என கூறிஉள்ளார். இதுதொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கி முன்னெடுத்து வருகிறது, அதே பள்ளியில் தேர்வு எழுத வந்த பிற மாணவிகளிடம் பேசுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் பட்டியலை பெற முயற்சிக்கிறோம் எனவும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்தஒரு புகாரும் வரவில்லை என பிராந்திய சிபிஎஸ்இ அதிகாரி தருண் குமார் கூறியுள்ளார்.

கடந்த வருடம் கண்ணூரில் இதுபோன்று மாணவி ஒருவர் உள்ளாடையை கழட்ட செய்ததாக புகார் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆட்சில் இல்லாத மாநிலங்களின் முக்கியமாக திராவிட மாநிலங்களின் இத்தையகைய கெடுபிடிகள் காட்டப்படுவதாக புகார்கள் சமூகவலைதளத்திலே குவிந்து வருகிறது...

மேலும் படிக்க :பதில் சொல்லுமா பாஜக அரசு...