மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அந்த அமைப்பின் நிர்வாகிகளை போலீஸார் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

Special Correspondent

மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து, தலைமைச் செயலகத்தை சுற்றி போலீஸார் ஐயாயிரத்துக்கு மேல குவிக்கப்பட்டுள்ளனர்.

Special Correspondent

இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று காலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து இறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 1300க்கு மேற்ப்ப்டட பேரை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் உளூந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 100க்கு மேற்ப்ப்டட பேரையும் போலிஸ் கைது செய்தனர்.

தலைமைச் செயலகத்துக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், அவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனைக்கு பிறகே போலீஸார் அனுமதித்து வருகின்றனர். தலைமைச் செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.