சி-ஃபோர் அமைப்பு, கர்நாடகத்தில் இம்மாதம் 1ம் தேதி முதல், 25ம் தேதிவரை 154 தொகுதிகளில் சர்வே நடத்தியுள்ளது.

Special Correspondent

இதில் காங்கிரஸ் கட்சி கூடுதலாக 9 சதவீத வாக்குகளை ஈர்த்து மொத்தம் 46 சதவீத வாக்குகளை ஈர்க்கும் என்று சொல்லியுள்ளது.

அதேநேரம், பாஜக 31 சதவீத வாக்குகளைத்தான் பெற முடியும் என்றும், ம.ஜ.த 16 சதவீத வாக்குகளை பெறும் என்றும் அந்த சர்வே கூறுகிறது.

தொகுதி அடிப்படையில் பார்த்தால், காங்கிரஸ் 126 தொகுதிகளை வென்று அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்றும், பாஜக தற்போதுள்ள 43 எம்எல்ஏக்கள் என்ற நிலையில் இருந்து சற்று முன்னேறி 70 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், ம.ஜ.த 27 தொகுதிகளை வெல்லும் எனவும் கணித்துள்ளது.

சர்வேயில் பங்கேற்ற 22,357 வாக்காளர்களில், 45 சதவீதம் பேர், சீத்தராமையாவை சிறந்த முதல்வர் வேட்பாளர் என கூறியுள்ளனர்.

26 சதவீதம் பேர் எடியூரப்பாவுக்கும், 13 சதவீதம் பேர் குமாரசாமிக்கும் ஆதரவு அளித்துள்ளனர்.

21 சதவீதம் பேர் சீத்தராமையா செயல்பாட்டில் மிகவும் திருப்தியடைந்துள்ளதாக கூறியுள்ளனர். 54 சதவீதம் பேர் ஏதோ ஒரு வகையில், திருப்தியடைந்துள்ளோம் என்றும், 25 சதவீதம்பேர் மட்டுமே திருப்தியில்லை எனவும் கூறியுள்ளனர்.

கடந்த கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இதே சி-ஃபோர் அமைப்பு வெளியிட்ட சர்வேயில், காங்கிரஸ் 119-120 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஏறத்தாழ துல்லியமாக காங்கிரஸ் அத்தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது என்பதும் குறிப்பிடதக்கது .