துணை வட்டாட்சியருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்ற பொருளில், சமூக ஊடகங்களில் வைரலாக ஒரு பதிவு பரவி வருகிறது. அந்த பதிவுகளுடன் ஒரு மனுவும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Special Correspondent

ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்து வரும் கோபால் என்பவர் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, அதாவது மே 22, 2018 அன்று தூத்துக்குடி சார் ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் நிர்வாக நடுவராக தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் பணியில் இருந்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் கோபால் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் மே 30 அன்று செய்திகள் வந்துள்ளன.

"அவ்வாறாக எந்த புகாரும் நான் (கோபால்) அளிக்கவில்லை. அந்த பகுதியில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், நான் முன்னர் பணிபுரிந்த திருசெந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பதவியை குறிப்பிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் தான் புகார் அளித்ததன் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது, அதனால் தானும் தன் குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்" என்று விவரிக்கிறது அந்த மனு.

Special Correspondent

இந்த மனுவை அளித்தது தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் து. செந்தூர் ராஜன்.

இந்த மனுதான் தூத்துக்குடி துணை வட்டாசியர் துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை என்ற பொருளில் பரவி வருகிறது.

இது தொடர்பாக, பேசிய து. செந்தூர் ராஜன், "தூத்துக்குடி நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கும் இந்த மனுவுக்கும் தொடர்பில்லை" என்று தெரிவித்தார்.

மேலும் , "ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் பணியில் இருந்த இடத்தில் எந்த அசாம்பாவிதமும் நடைபெறவில்லை. அவர் காவல் துறையிடமும் எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆனால், அவர் புகார் அளித்ததாக செய்தி பரவி வருகிறது. காவல் துறை வேண்டுமென்றே புகார் பதிவு செய்து, மக்களை கைது செய்து அதற்கு கோபாலை காரணமாக்கிவிடக் கூடாது என்பதை தெளிவாக்கத்தான் இந்த மனுவை அளித்தோம். மாவட்ட ஆட்சியரிடமும் இது குறித்து தெளிவாக விளக்கி இருக்கிறோம்" என்றார்.

Special Correspondent

அனால் மார்க்ஸ் தலைமையில் சென்ற மனித உரிமை உண்மை அறியும் குழுவினர் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் முன் மே 22 தேதியிட்டு பதிவு செய்யப் பட்டுள்ள 3 FIR களை வெளியிட்டதாகவும் அதில் அவ்வாறு போராடும் மக்களைச் சுடுவதற்கு ஆணையிட்டதாக சேகர், கண்ணன் எனும் இரு துணைத் தாசில்தார்களும் சந்திரன் என்கிற கலால் துறை அதிகாரி ஒருவரும் தான் புகார் அளித்துள்ளதாக உள்ளன என்றும்.,

தெற்கு காவல் நிலையத்தில் சுட ஆணையிட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல் சுட ஆணை இட்டுள்ளதாகக் குறிப்பிடப் படுவது சௌ.சந்திரன் எனும் தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலர் என்றும் .,

இப்போது தன் பெயரில் பொய் FIR பதிவு செய்துள்ளதாகச் செய்திகள் வ்சருவதாக கோபால் எனும் துணைத் தாசில்தார் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது என்றும்.,

இந்த 3 FIRகள் தவிர கோபால் பெயரில் நான்காவது FIR ஏதும் போடப்பட்டுள்ளதா அல்லது இன்னொரு துப்பாக்கிச் சூடும் அன்று நடந்துள்ளதா என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.

தொடர் செய்திகள்