சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு பட உலகை சேர்ந்த பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள், தயரிப்பாளர்கள் மீது சரமாரியாக பாலியல் குற்றசாட்டுகளை அடுக்கி தெலுங்கு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

Special Correspondent

பின்னர் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பிய அவர் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலும் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும், தனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் இது தமிழ் சினிமாவிற்கான நேரம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு எச்சரித்தார். இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "பாலியல் தொல்லை குறித்து நடிகை ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது.

நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீரெட்டி மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் கார்த்தியின் கருத்திற்கு பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி... "என் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றாக அதையெல்லாம் வெளியிடுவேன். நான் தனியாக வசித்து வருவதால் என் மொபைலில் எதையும் அழிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிலால் நடிகர் சங்கம் அதிர்ச்சி அடந்துள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்பு செய்திகள் : நடிகை ஸ்ரீ ரெட்டி அதிரடியாக மிரட்டல் கலக்கத்தில் கோலிவுட்