டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்த வழக்கில், யூனியன் பிரதேச ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் கடந்த 2 நாட்களுக்கு முன் தீர்ப்பளித்தது. அரசியலமைப்பு பெஞ்ச் வழங்கிய இந்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வை ஏற்ப்படுத்த இத்தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

Special Correspondent

மேலும் இனி புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்புகளை பார்வைக்காக மட்டுமே அனுப்புவோம். துணைநிலை ஆளுநர் புதுச்சேரி மாநிலத்தின் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உரிமை உண்டு. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் இல்லை என்றும் நாராயணசாமி கூறியிருந்தார்.

இதற்கு கிரண் பேடி தரப்பில் அளித்துள்ள பதிலில், யூனியன் பிரதேசமான புதுவையும், டெல்லியும் ஒன்றல்ல என்றும்.,

அரசியல் அமைப்பு சட்டத்தின் இருவேறு பிரிவுகளின் கீழ் இரு யூனியன் பிரதேசங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது எனவும் கோபமாக பதிலடி கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் நிலவி வந்த ஆளுநர் - முதலமைச்சர் இடையிலான மோதல் மேலும் முற்றி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்கவில்லை என்றால், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றும் நாராயணசாமி திரும்ப தாக்குதால் அறிக்கை கொடுத்தார்.

இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று வழக்கம் போல துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஊசுடு ஏரிக்கு ஆய்வுக்கு சென்றார்.

பொதுவாக கிரண்பேடி இவ்வாறு செல்லும்போது அரசுத் துறைகளின் முக்கிய அதிகாரிகள் அவருடன் உடன் செல்வது உண்டு. ஆனால், இன்றைய தினம் ஏரிக்கு சைக்கிளில் சென்ற கவர்னருடன் பெரும்பாலான அதிகாரிகள் உடன் செல்லவில்லை. வனத்துறை அதிகாரி குமார் மற்றும் வழக்கமாக செல்லும் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே சென்றனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலி காரணமாகவே அதிகாரிகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை புறக்கணித்ததாக கூறப்படுகிறது இதில் பயங்கர அப்செடாகி கிரண்பேடி உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

தொடர்பு செய்திகள் : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கே அதிகாரம் துணைநிலை ஆளுனருக்கு அல்ல