ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படியான தமிழக அரசின் அரசாணையையும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 25.05.2018ல் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதிக்குமாறு வேதாந்தா குழுமம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Special Correspondent

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும் வரை, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யுமாறு ஆலை நிர்வாகம் வைத்த கோரிக்கையையும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணை நடத்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நீங்கள் வந்து கேட்டதும் உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது. ஆலை தொடர்ந்து இயங்குவதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது.

வழக்கு விசாரணையை 19ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்திருக்கும் மனு மீது தமிழக அரசு 19ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

எனவே அந்த வழக்கு விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தவே வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

தொடர்பு செய்திகள் : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கே அதிகாரம் துணைநிலை ஆளுனருக்கு அல்ல