டெல்லியில் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஒரு பெண் தனது கணவர் மற்றும் மைத்துனருடன் காரில் திரும்பி கொண்டு இருந்தனர்.

Special Correspondent

மைத்துனரின் காரில், கணவர் மற்றும் மைத்துனருடன் 22 வயதுள்ள அந்த பெண், செக்டார் 56 பகுதியிலுள்ள, பிசினஸ் பார்க் டவர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கணவர் காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார்.

இயற்கை உபாதையை கழிப்பதற்காக அந்த இளம்பெண்ணின் கணவர் கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது 2 கார்களில் நால்வர் அங்கே வந்துள்ளனர். ஏன் இங்கே காரை நிறுத்தி உள்ளீர்கள் என அதிகார தோரணையில் அவர்கள் கேட்டுள்ளனர். இதற்கு அந்த பெண்ணின் மைத்துனரும், கணவரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தபோதே, நால்வரின் பார்வையும், காருக்குள் இருந்த அந்த இளம்பெண் மீது பதிந்துள்ளது.

தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்ட அந்த நால்வரும் திடீரென பாய்ந்து சென்று, அந்த பெண்ணை காருக்கு வெளியே இழுத்து கொண்டுவந்தனர். மூன்று பேர் துப்பாக்கி முனையில், கணவரையும், மைத்துனரையும் பிடித்துக்கொண்டனர். மற்றொருவர் அந்த பெண்ணை அவர்கள் கண் எதிரில் பலாத்காரம் செய்தார். இப்படி மாறி, மாறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பிறகு நால்வரும் காரில் தப்பினர்.

தப்பிச் செல்லும் முன்பாக இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிவிட்டு சென்றனர். ஆனால் அந்த நேரத்திலும் அப்பெண்ணின் கணவர், பலாத்கார கொடூரர்கள் தப்பிச் சென்ற கார் ஒன்றின் பதிவு எண்ணை கவனித்துக்கொண்டார். இதுகுறித்து பின்னர் போலீசில் புகார் அளித்தார்.

குர்கான் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கார் பதிவு எண்ணை வைத்து, சோஹ்னா பகுதியிலுள்ள ஜோகல்கா கிராமத்தை சேர்ந்த நான்கு காமுகர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உதவி போலீஸ் கமிஷனர் மனிஷ் செகல் தெரிவித்தார்.

பட்டபகலில் பஜக ஆளும் மாநிலத்திலே குர்கான் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை எறபடுத்தி உள்ள்து.