ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வி குறித்து ஆலோசிக்காதது ஏன் என முதல்வர் பழனிசாமிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் காட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.

Special Correspondent

இது குறித்து கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : ‛‛ ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியடைந்தது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் இதுவரை ஆலோசிக்காதது ஏன்?, எனது தோல்விக்க யார் காரணம். தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகிகள் முக்கியமாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீதுமீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நான் வெற்றி பெற்றிருந்தால் அது கழகத்தின் வெற்றியாக இருக்கும். நான் தோற்றது கழகத்தின் தோல்விதானே?

திமுக தனது தோல்வி குறித்து ஆராய்ந்து தேர்தலில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை கூண்டோடு நீக்கியுள்ளனர்.

ஆனால் இப்போது வரை தோல்வி குறித்து அதிமுக எந்த ஆய்வு கூட்டமும் நடத்தவில்லை. எனது கேள்விகள் குறித்து திருப்திகரமான பதில் தரவில்லை எனில் எனது முடிவு தன்னிச்சையாக இருக்கும். '' இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவைத்தலைவர் மதுசூதனனின் எனது முடிவு தன்னிச்சையாக இருக்கும் மிரட்டலால் அதிமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இரட்டைஇலை மதுசூதன் பெயரிலே தேர்தல் கமிஷன் வழங்கிய நிலையில் மதுசூதனன் எழுப்பியுள்ள 4 கேள்விகள் பெரும் சங்கடத்தை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளதை பன்னிர் செல்வம் அணியினர் அமைதியாக ரசிப்பதாக உட்கட்சி பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த குழப்பத்தில் தான் நேற்று திமுக போக்குவரத்து ஊழியர்கள் பிரச்னையில் அரசுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தததாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.