கமலின் கட்சி துவக்கம் குறித்து கேட்டபோது , அவரது கூட்டத்தை முழுவதுமாக பார்த்தேன். இதற்கு பின்னர் மீண்டும் அவருக்கு நான் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன். கமல் ஒரு திறமைசாலி அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு தெரிகிறது என்றும்.,

Special Correspondent

மக்கள் நலனுக்காக ஒவ்வொருவரும் வேறுபாட்டு வழியில் சென்றாலும் போய்ச்சேரும் இடமும் நோக்கமும் ஒன்றுதான் என்றும்,

மேலும் அரசியலில் கட்டமைப்பு தான் மிக மிக முக்கியம் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

முன்னதாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினி பேசிய போது "அனைத்து ரசிகர்களையும் ஒரே நேரத்தில் சந்திப்பதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். ரஜினி மக்கள் இயக்கம் 32 ஆண்டுகளாக கவனத்துடன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது; இதனை மேலும் பலப்படுத்துவதே நோக்கம். எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் பாடம் கற்றுத்தர தேவையில்லை; அவர்கள்தான் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள். மிகப்பெரிய கட்சிகளின் வெற்றிக்கு, அக்கட்சிகளின் கட்டமைப்பே காரணம். அதனால் தான். அவை வெற்றி பெற்றன. மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம்" என்றார்

மேலும் ஒரு குடும்பம் நடத்த வேண்டுமென்றால், கூட குடும்ப தலைவன் சரியாக இருக்க வேண்டும். நான் சரியாக இருக்கிறேன். அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள்வது முக்கியம். நமது பயணம் நீண்ட பயணம். இது சாதாரண பில்டிங் இல்லை. இதற்கு வலுவான அடித்தளம் அவசியம். தமிழகத்தில் 32 மாவட்டங்கள் உள்ளதால், அரசியலில் அடித்தளம் வலுவாக இருக்க வேண்டும். அடித்தளம் வலுவாக அமைக்க வேண்டும் என்பதால் தான் நாம் இந்த நிலைமையில் இருக்கிறோம் " என்று ரஜினி பேசினார்.