கடந்த 2015-ல் தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இவற்றில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் மருத்துவனை அமைப்பதற்கான இடம் தேர்வு, கட்டுமானம் உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் எப்பொழுதோ துவங்கிவிட்டன.

Special Correspondent

அதேபோல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஐந்து இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது. அதன் தொடர்ச்சியாக 2015 ஏப்ரலில் மத்திய குழு ஒன்று தமிழகம் வந்து ஆய்வு நடத்தியது. ஆனால் அதன் பின்பும் மருத்துவமனை அமையப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதிமுக இரு பிரிவினர் இடம் குறித்து மோதி கொள்வதால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு முடிவை எடுக்கும் என்று பிரச்ச்னையை ஒத்தி போட்டார்.

அப்படியும் எந்த விதமான பதிலும் இல்லாத காரணத்தால் எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் மருத்துவமனை அமையும் இடத்தை விரைவில் அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி திரும்பவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நகல் ஒன்று உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்த ரமேசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு மத்திய அரசு முடிவு செய்யும் என்று கூறிய நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது என்பது மாநில அரசு மத்திய அரசு இடையே உள்ள பிரச்சனை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ள்னர்