ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர் தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன் ஓ.பி.எஸ். புகாருக்கு பதிலடி கொடுத்துள்ளார்..

Special Correspondent

முன்னதாக அதிமுக கட்சி அலுவலகத்தில் பேட்டியளித்த ஓபிஎஸ் தினகரனை மாயமான் என்று கூறி தான் ஒரு 420 பேர்வழி என்று தன்னிடம் தினகரன் கூறியதாக தெரிவித்த நிலையில்., மேலும் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதற்காக ஜெயலலிதாவை எதிர்த்து பேசிய எம்பி சசிகலா புஷ்பா தினகரனுக்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் ஜெயக்குமாரை ஆமைத் தலையர் என்று டிடிவி.தினகரன் கிண்டல் செய்து பேசிய தினகரன் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தது எடப்பாடி பழனிசாமி அணி தான் என டிடிவி குற்றம்சாட்டினார்.

யாரவது ரூ.20 நோட்டை கொடுத்து கடன் சொல்லி வாக்கு கேட்பதை மக்கள் ஏற்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆர்.கே.நகரில் தோல்வி அடைந்தவர்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் எனவும் டிடிவி கூறியுள்ளார்.

இந்த நிலையில் மக்கள் 20 ரூபாய் வைத்து தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 10000 ரூபாய் தருவதாக தினகரன் அணியினர் கூறிய நிலையில் இப்போது 20 ரூபாய் நோட்டை வைத்து கொண்டு எதுவும் பெற முடியாத நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை கோபத்துடன் தெரிவித்ததாக செய்தி ஊடகங்கள் கூறுகின்றனர்.