நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீதான வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

Special Correspondent

நடிகர் சசிகுமாரின் உறவினரான அசோக்குமார் நவம்பர் 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில், அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அன்புச்செழியன் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரது ஜாமின் மனுவும் நிராகரிப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். தமிழக முக்கிய அமைச்சர் பினாமியாக செயல்பட்டு வரும் அன்பு செழியனை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...