சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு கூடுதல் நீதிபதிகள் வெள்ளிகிழமை பதவியேற்றனர்.

Special Correspondent

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோலிஜியம் பரிந்துரையின் பேரில், மாவட்ட நீதிபதிகள் பணியிடத்தில் இருந்து வரும் ஆறு பேர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து மத்திய சட்டத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

எஸ். ரமாதிலகம்,
ஆர். தரணி,
ஆர். ராஜமாணிக்கம்,
டி. கிருஷ்ணவள்ளி,
ஆர்.பொங்கியப்பன்,
ஆர் ஹேமலதா
ஆகிய ஆறு பேர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வெள்ளிக்கிழமை காலை ஒன்பதரை மணிக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டடத்தில் நடைபெறும் விழாவில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவர்கள் 6 பேரும் நீதிபதியாக பதவியேற்க உள்ளதை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.