திருமணத்திற்குப் பின்னும் நடிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சமந்தா, முதன் முறையாக சென்னையை அடுத்த செங்குன்றத்தில் ஒரு ஷாப்பிங் மாலை திறந்து வைப்பதற்காக இன்று வருகை தந்தார்.

Special Correspondent

ஷாப்பிங் மாலை திறந்து வைப்பதற்காக வந்த நடிகை சமந்தாவைக் காண திரளான ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சமந்தா வருவதை அறிந்து இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும், வளாக வாயிலிலும் ரசிகர்கள் திரண்டனர். முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினர். இதை அடுத்து ஏராளமான தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Special Correspondent

சமந்தாவைக் கண்டதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். கடும் நெரிசல்களுக்கு இடையே நடிகை சமந்தா பாதுகாப்பாக வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

கூடியிருந்த இளைஞர்கள் கூட்டம் சமந்தாவை செல்போனில் படம்பிடிக்க அலைமோதியது. சமந்தாவை பார்க்க தொடர்ந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் சீர் செய்யப்பட்டது.